ADDED : செப் 03, 2024 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி, : செங்கப்படை கிராமத்தில் அழகுவள்ளி அம்மன் கோயில் ஆவணி பொங்கல், முளைப்பாரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கிராமத்தின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் மஞ்சள் நீர் துாக்கி கொடியை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது. மூலவரான அழகுவள்ளி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம் நடந்தது. கொடிமரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டினர்.
தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெறும். செப்.9ல் விளக்கு பூஜை, செப்.,10ல் பொங்கல் வைத்தல், கரகம் ஊர்வலம், செப்.11ல் அக்னிசட்டி, பூக்குழி, வேல் குத்துதல், சாக்கு, சேத்தாண்டி வேடம், முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை செங்கப்படை கிராம மக்கள் செய்துள்ளனர்.