/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரத்தின்றி பன்னீர் திராட்சை விலை உயர்வு: கிலோ ரூ.100
/
வரத்தின்றி பன்னீர் திராட்சை விலை உயர்வு: கிலோ ரூ.100
வரத்தின்றி பன்னீர் திராட்சை விலை உயர்வு: கிலோ ரூ.100
வரத்தின்றி பன்னீர் திராட்சை விலை உயர்வு: கிலோ ரூ.100
ADDED : மே 30, 2024 03:11 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்திற்கு வெளியூர்களில் இருந்து வரத்தின்றி பன்னீர் திராட்சை விலை அதிகரித்து கிலோ ரூ.80 முதல் ரூ.100க்கு விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறைந்த அளவே சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலும் திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி ராமநாதபுரம் மார்க்கெட், வாரச்சந்தைகளில் வியாபாரிகள் விற்கின்றனர்.
தற்போது பன்னீர் திராட்சை வெளியூர்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் கடந்த மாதம் கிலோ ரூ.50 முதல் 70க்கு விற்றது தற்போது அதிகபட்சமாக கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது.
வெப்ப சலனம் காரணமாக பழங்கள் விற்பனை அதிகரித்துஉள்ளதாக வியாபாரிகள் கூறினர்.