ADDED : ஆக 01, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி காந்தி சிலை முன்பு இந்திய கம்யூ., சார்பில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் செயலாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். உதய் மின் திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு மாநிலங்கள் மீது மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க கூடாது.
மாதந்தோறும் மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். மேலும் மின் கட்டண உயர்வை அறிவித்த தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் சிவக்குமார், கோவிந்தன், ராமமூர்த்தி, ருக்மாங்கதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.