sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடியில் அந்நியர் ஊடுருவலை தடுக்க இந்திய வீரர்கள் ரோந்து

/

தனுஷ்கோடியில் அந்நியர் ஊடுருவலை தடுக்க இந்திய வீரர்கள் ரோந்து

தனுஷ்கோடியில் அந்நியர் ஊடுருவலை தடுக்க இந்திய வீரர்கள் ரோந்து

தனுஷ்கோடியில் அந்நியர் ஊடுருவலை தடுக்க இந்திய வீரர்கள் ரோந்து


ADDED : மே 23, 2024 11:51 PM

Google News

ADDED : மே 23, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு இலங்கையில் இருந்து கடல் வழியாக அந்நியர்கள் ஊடுருவுவதை தடுக்க இந்திய கடலோர காவல் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தனுஷ்கோடி முதல் இலங்கை மன்னார் வரை உள்ள கடல் பகுதி 35 கி.மீ., துாரமே உள்ளது.

இதனால் இக்கடல் வழியை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் எவ்வித அச்சமும் இன்றி ஊடுருவுகின்றனர். இவர்களுடன் சதிச்செயலில் ஈடுபட பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் மன்னார் வளைகுடா கடல், பாக்ஜலசந்தி கடலில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

நேற்று தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் அருகில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் ஹோவர் கிராப்ட் கப்பலில் ரோந்து வந்த வீரர்கள் அங்கு கப்பலுடன் திடீரென முகாமிட்டு இருந்தனர்.

இலங்கையில் இருந்து மர்ம படகில் அந்நியர்கள் யாரேனும் ஊடுருவி உள்ளனரா, அவர்களை பிடிக்க இந்திய வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு இருப்பது போல் தெரிந்தது.

ஆனால் இது வழக்கமான ரோந்து பணி தான். இலங்கையில் இருந்து அந்நியர்களோ, கடத்தல்காரர்களோ ஊடுருவல் ஏதும் இல்லை என பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us