sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானையில் நெல் விதைப்பு பணி தீவிரம் விதை நெல் விலை உயர்வால் கவலை

/

திருவாடானையில் நெல் விதைப்பு பணி தீவிரம் விதை நெல் விலை உயர்வால் கவலை

திருவாடானையில் நெல் விதைப்பு பணி தீவிரம் விதை நெல் விலை உயர்வால் கவலை

திருவாடானையில் நெல் விதைப்பு பணி தீவிரம் விதை நெல் விலை உயர்வால் கவலை


ADDED : செப் 07, 2024 05:18 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நெல் விதைப்பு பணிகள் துவங்கிய நிலையில் விதை நெல் விலை உயர்வால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருவாடானை தாலுகாவில் மழையை பயன்படுத்தி விளை நிலங்களை விதைப்பு செய்வதற்கு ஏற்ற வகையில் உழவு செய்து தயார் நிலையில் வைத்திருந்த விவசாயிகள் தற்போது நேரடி நெல் விதைப்பு பணியை துவக்கியுள்ளனர்.

கிளியூர், அஞ்சுகோட்டை, வாணியேந்தல், ஆலம்பாடி, குஞ்சங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேரடி நெல் விதைப்பை தீவிரபடுத்தியுள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது: விதைப்பு பணியை துவக்கியுள்ளோம். ஆனால் விதை நெல் விலை உயர்ந்துள்ளதால் கவலையாக உள்ளது. 30 கிலோ ஆர்.என்.ஆர்., நெல் விதை ரூ.1150க்கும், என்.எல்.ஆர்., ரூ.950க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து வகை நெல் விதைகளும் ரூ.50 முதல் 100 வரை விலை உயர்ந்துள்ளது.

ஆண்டுதோறும் விதை நெல், உரம், பூச்சி மருந்து விலை உயர்வு கவலை அளிக்கிறது என்றனர்.






      Dinamalar
      Follow us