ADDED : மே 02, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி தாலுகா நீராவி கரிசல்குளம் குரூப் வி.ஏ.ஓ.,வாக ஸ்ரீதேவி பணியாற்றி வருகிறார். ராமசாமிபட்டி அருகே அய்யனார்குளம் பகுதியில் பணி முடிந்து நீராவி கரிசல்குளம் செல்லும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாதவர்கள் ஸ்ரீதேவியை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
கமுதி போலீசில் ஸ்ரீதேவி அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

