sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருப்புல்லாணி, பரமக்குடி பெருமாள் கோயில்களில் ஜேஸ்டாபிஷேகம்

/

திருப்புல்லாணி, பரமக்குடி பெருமாள் கோயில்களில் ஜேஸ்டாபிஷேகம்

திருப்புல்லாணி, பரமக்குடி பெருமாள் கோயில்களில் ஜேஸ்டாபிஷேகம்

திருப்புல்லாணி, பரமக்குடி பெருமாள் கோயில்களில் ஜேஸ்டாபிஷேகம்


ADDED : ஜூன் 22, 2024 05:13 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் ஜேஸ்டாபிஷேக உற்ஸவம் நடந்தது. பரமக்குடி பெருமாள் கோயில்களிலும் நடந்தது.

ஜேஸ்டாபிஷேகம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பவுர்ணமி அன்று கேட்டை நட்சத்திரத்தில் உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாள் மீது பொருத்தப்பட்டுள்ள வெள்ளிக்கவசத்தை வெளியில் எடுத்து விட்டு உற்ஸவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.

நேற்று காலை 8:00 மணிக்கு உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாளின் மீது சாற்றப்பட்டிருந்த வெள்ளி கவசங்கள் முழுமையாக அகற்றப்பட்டு விசேஷ திருமஞ்சனத்திற்கு பிறகு மீண்டும் சாற்றப்பட்டது. ஆண்டில் நிகழக்கூடிய குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பிராயசித்த பூஜைகளும் நடந்தது. அதனைத் தொடர்ந்து மாலையில் புஷ்ப யாகம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவர் உள்பிரகார வீதியில் உலா வந்தார்.

சாற்று முறை கோஷ்டி பாராயணம் நடந்தது. நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

*பரமக்குடி சுந்தர்ராஜ் பெருமாள் கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியம் என அபிஷேகம் நடந்தது. மேலும் கலசங்களில் இருந்த புனித நீர் சுவாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

* எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த ஜேஷ்டாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது அர்ச்சகர்கள் ஹோமங்கள் செய்து பூர்ணாகுதிக்கு பின் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு கருட வாகனத்தில் பெருமாள் வீதி வலம் வந்தார்.






      Dinamalar
      Follow us