/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் 'ஆட்டை'
/
அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் 'ஆட்டை'
ADDED : ஆக 01, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பார்த்திபனுார் அழகப்பன்சேரியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 54. இவர் கமுதி நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றுகிறார். இவரது மனைவி நயினார்கோவில் பகுதியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இருவரும் ஜூலை 30ல் காலை வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றனர். பணி முடிந்து மாலை 5:30 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் பீரோவில் இருந்த 47 சவரன் நகைகள், 50,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.