நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மு.துாரி கிராமத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு தென்மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, துாத்துக்குடி, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் ப்ரோ கபடி விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. முடிவில் கே.கருங்குளம் அணி முதல் பரிசு, மு.துாரி அணி இரண்டாம் பரிசு, குருவிகாத்தி அணி மூன்றாம் பரிசும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.
ஏற்பாடுகளை மு.துாரி இருளப்பசாமி செவன்ஸ், கிராம மக்கள் செய்தனர்.

