/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் கோதண்டராமசாமி - சீதாலட்சுமி திருக்கல்யாணம்
/
பரமக்குடியில் கோதண்டராமசாமி - சீதாலட்சுமி திருக்கல்யாணம்
பரமக்குடியில் கோதண்டராமசாமி - சீதாலட்சுமி திருக்கல்யாணம்
பரமக்குடியில் கோதண்டராமசாமி - சீதாலட்சுமி திருக்கல்யாணம்
ADDED : ஏப் 19, 2024 05:12 AM

பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் ராமநவமி விழாவையொட்டி திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது.
பரமக்குடி நகராட்சி எதிரில் உள்ள அனுமார்கோதண்டராமசாமி கோயிலில் ராமநவமி விழா நடக்கிறது.
தினமும் ராமர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். நேற்று காலை 10:00 மணிக்கு சங்கர மடத்திலிருந்து, பேரரசர் தசரத சக்ரவர்த்தியின் திருக்குமரன்நாராயண மூர்த்தி எனும் கோதண்ட ராமசுவாமி மாப்பிள்ளை திருக்கோலத்தில் வலம் வந்தார்.
மேலும் சுப்ரமணிய சுவாமி கோயிலில் இருந்து சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோயில் மண்டபத்தில் மிதிலை பேரரசர் ஜனக மன்னன் மகள், மகாலட்சுமி என்ற சீதாலட்சுமி பிராட்டிக்கும், கோதண்டராம சுவாமிக்கும் காலை 11:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு 7:00 மணிக்கு ராமர், சீதை பட்டுப்பல்லக்கில் பட்டிணப்பிரவேசம் வந்தனர்.
விழாவில் அறங்காவலர்குழு தலைவர் இளையராஜா, சரக பொறுப்பாளர் சுந்தரேஸ்வரி உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

