
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி : ராமகிருஷ்ண மடம் சார்பில் தேசிய இளைஞர் தின விழா சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடந்தது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை அமிர்த வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி பிளஸ்-1 மாணவி ஜெ.லோகமித்திரை பேச்சு போட்டியில் இரண்டாமிடம் பிடித்து பரிசு, சான்றிதழ் பெற்றார்.
மாணவியை பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி, முதல்வர் கோகிலா, துணை முதல்வர் பாலவேல் முருகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

