ADDED : மே 06, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : -பரமக்குடி காந்தி சிலை முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர் தின பொதுக்கூட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் ராதா தலைமை வகித்தார்.
சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சந்தானம் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பத்மாவதி, சி.ஐ.டி.யு., மாநில துணை தலைவர் சிங்காரன் பேசினர்.
மாவட்ட செயலாளர்கள் ராஜன், சிவாஜி வாழ்த்தினார்.
நெசவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், கட்டுமான தொழிற்சங்கம், மீனவர் சங்கம், ஆட்டோ சங்கம், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.