நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடந்தது. செல்லி அம்மனுக்கு 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பின் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்தனர். செல்லி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் சாந்தா தலைமையில் 108 விளக்கு பூஜை நடந்தது. இதில் முதுகுளத்துார், தூரி, செல்வநாயகபுரம் பகுதிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.