sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காரங்காட்டில் படகு போக்குவரத்து துவக்கம்

/

காரங்காட்டில் படகு போக்குவரத்து துவக்கம்

காரங்காட்டில் படகு போக்குவரத்து துவக்கம்

காரங்காட்டில் படகு போக்குவரத்து துவக்கம்


ADDED : ஜூன் 16, 2024 04:37 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: கள்ளக்கடல் எச்சரிக்கையால் பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டதால் காரங்காட்டில் படகு போக்குவரத்து துவக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 10 முதல் 14 இரவு 11:30 மணி வரை கடலில் பேரலைகள் எழக்கூடும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

கடற்கரையை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் கடல் அருகில் செல்லவோ, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளவோ, கடலில் இறங்கி குளிக்கவோ கூடாது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். மீனவர்கள் தங்களது படகுகளை சேதம் அடையாத வகையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மரைன் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு செய்தனர். இதனால் தொண்டி அருகே காரங்காட்டில் படகு போக்குவரத்து கடந்த ஐந்து நாட்களாக நிறுத்தப்பட்டது.

கள்ளக்கடல் எச்சரிக்கை நேற்று முன்தினத்துடன் முடிந்ததால் காரங்காட்டில்வழக்கம் போல் படகு போக்குவரத்து துவங்கப்பட்டது என வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us