/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சட்ட விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
/
சட்ட விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
ADDED : ஜூன் 13, 2024 05:40 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரத்தை நீதிபதி ராஜகுமார் துவக்கி வைத்தார்.
பின்பு அவர் கூறியதாவது, சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கிராமங்களில் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.
சட்டத்தினை பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிவில், குடும்ப வழக்குகள், வங்கி கடன் சம்பந்தமாகவும், குற்றவியல் வழக்குகள், ஜாமீனில் வெளியில் வருவது,பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் பற்றி தெரிந்து கொள்வது, முதியோர்கள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவது, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு ஆகியவற்றை வட்ட சட்ட பணிகள் குழுவில் மனுவாக அளித்து ஆலோசனை பெறலாம் என்றார்.
பின்பு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள், பொதுமக்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.