ADDED : ஜூலை 04, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: புதிய சட்டத்திற்கு எதிராக திருவாடானை வக்கீல்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு வக்கீல்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திருவாடானை நீதிமன்றத்தில் ஜூலை 1 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாடானை வக்கீல் சங்கத் தலைவர் சிவராமன் கூறுகையில், புதிய சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஜூலை 8 வரை தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
ஸ்டிரைக்கால் நீதிமன்றங்களில் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.