/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செங்கல் சூளையில் சட்ட விழிப்புணர்வு
/
செங்கல் சூளையில் சட்ட விழிப்புணர்வு
ADDED : ஜூன் 22, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகேகிராமங்களில் செங்கல் சூளைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நயினார்கோவில் அருகே பாண்டியூர்கிராமம் பி.எஸ்.ஆர்., செங்கல் சூளையில்நயினார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டியன்தலைமையில் முகாம்நடந்தது.
வக்கீல் பாலமுருகன் முன்னிலை வகித்தார். தொழிலாளர்கள் மத்தியில் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பரமக்குடி அருகே மஞ்சூர் பகுதிகளில் நடந்த முகாமில் வக்கீல் வீரமணிகண்டன், தாலுகா போலீஸ் எஸ்.ஐ., சண்முகவேலு கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சட்டதன்னார்வலர்கள் முருகேசன், ராஜேந்திரன் செய்தனர்.