sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மரம் வளர்த்து மழைபெறுவோம்:வேளாண் ஆராய்ச்சி மையத்தில் மரக்கன்றுகள்: மக்களை ஊக்கப்படுத்த இலவசமாக வழங்கல்

/

மரம் வளர்த்து மழைபெறுவோம்:வேளாண் ஆராய்ச்சி மையத்தில் மரக்கன்றுகள்: மக்களை ஊக்கப்படுத்த இலவசமாக வழங்கல்

மரம் வளர்த்து மழைபெறுவோம்:வேளாண் ஆராய்ச்சி மையத்தில் மரக்கன்றுகள்: மக்களை ஊக்கப்படுத்த இலவசமாக வழங்கல்

மரம் வளர்த்து மழைபெறுவோம்:வேளாண் ஆராய்ச்சி மையத்தில் மரக்கன்றுகள்: மக்களை ஊக்கப்படுத்த இலவசமாக வழங்கல்


ADDED : ஜூன் 02, 2024 03:38 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 03:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகள், பொதுமக்களுக்கு நிழல் தரும் புளி, வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் வறட்சி மாவட்டமாக அடையாளப்படுத்தப்படும் ராமநாதபுரத்தில் மரங்களை அதிகரித்து மழை வளத்தை பெருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகள், நெடுஞ்சாலையோரங்கள், கடற்கரை பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகள் நட வலியுறுத்துகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் நிழல் தரும் மரங்களான புங்கன், புளி, வேம்பு ஆகியவற்றின் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. தற்போது கோடை மழை பெய்து மண்ணில் ஈரப்பதம் உள்ளதால் வீடுகள், ரோட்டோரங்களில் அதிகளவில் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடலோர உவர் ஆராய்ச்சி மையம் திட்டப் பொறுப்பாளர் வள்ளல் கண்ணன் கூறுகையில், விவசாயிகள், பொதுமக்கள் மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுபோக வீடு, வணிக வளாகம், தோட்டங்களில் வளர்க்கும் விதமாக மா, முருங்கை, கீரை வகை, ரோஜா, மல்லிகை, செம்பருத்தி,அலங்காரச்செடிகள் குடில்அமைத்து வளர்க்கப்படுகிறது. இவை ரூ.20 முதல் ரூ.50 என குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்றார்.------






      Dinamalar
      Follow us