ADDED : ஜூலை 04, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் லாரி மீது நின்றிருந்த லோடு மேன் மின் கம்பி உரசி பலியானார்.
பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் 59. இவர் பரமக்குடி மரைக்காயர்பட்டணம் பகுதியில் லாரியில் லோடு ஏற்றி நின்று கொண்டிருந்தார்.
அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். மனைவி இருளாயி புகாரில் லாரி டிரைவர் குமார் 64, மீது வழக்கு பதிந்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.