/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காணாமல் போன அலைபேசி, ஆவணங்கள் 30 நிமிடத்தில் கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைப்பு
/
காணாமல் போன அலைபேசி, ஆவணங்கள் 30 நிமிடத்தில் கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைப்பு
காணாமல் போன அலைபேசி, ஆவணங்கள் 30 நிமிடத்தில் கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைப்பு
காணாமல் போன அலைபேசி, ஆவணங்கள் 30 நிமிடத்தில் கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 27, 2024 06:42 PM

ராமநாதபுரம்:ராநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த பெண் தொலைத்த அலைபேசி, வங்கி பாஸ் புத்தகம், ஆதார் கார்டு, உட்பட ஆவணங்களை 30 நிமிடத்தில் கண்டு பிடித்து ஒப்படைத்த இன்ஸ்பெக்டரை பாராட்டினர்.
ராமநாதபுரம் ஓம்சக்திநகரை சேர்ந்தவர் செய்யது ஷேக் அப்துல்லா மகள் நுாருல் ஆரிபா 30, இவர் தனது டூவலரில் ஓம்சக்தி நகரில் இருந்து காலை 11:00 மணியளவில் ராமநாதபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது அவரது கைப்பையில் வைத்திருந்த அலைபேசி, 2, 500 ரூபாய் ரொக்கம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார்கார்டு உட்பட ஆவணங்களுடன் தொலைந்துவிட்டது. இது குறித்து ராமநாதபுரம் நகர் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உடனடியாக தனிக்கவனம் எடுத்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடினார். அலைபேசியின் சிக்கனல் எங்கு கிடைக்கிறது என கண்டறிந்தனர்.
அதன்படி சம்பந்தப்பட்ட இடத்தில் கிடந்த நுாருல் ஆரிபாவின் கைப்பையை மீட்டு அதிலிருந்த அலைபேசி, ரொக்க பணம் 2,500, ஆதார் கார்டு, வங்கி கணக்குப்புத்தகம் உட்பட அனைத்து ஆவணங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொலைந்து போன 30 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்து பொருட்களை மீட்டு நுாருல் ஆரிபாவிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை அனைவரும் பாராட்டினர்.

