/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
(இந்த செய்தியை கண்டிப்பாக சேர்க்கவும், விருதுநகருக்கும் அனுப்பவும் சார்) கிராம மக்களின் தேவைகள் பூர்த்தி செய்வேன்: பன்னீர் செல்வம் உறுதி கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்: பன்னீர்செல்வம் உறுதி குதிரை மீது இரக்கம் காட்டினார்
/
(இந்த செய்தியை கண்டிப்பாக சேர்க்கவும், விருதுநகருக்கும் அனுப்பவும் சார்) கிராம மக்களின் தேவைகள் பூர்த்தி செய்வேன்: பன்னீர் செல்வம் உறுதி கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்: பன்னீர்செல்வம் உறுதி குதிரை மீது இரக்கம் காட்டினார்
(இந்த செய்தியை கண்டிப்பாக சேர்க்கவும், விருதுநகருக்கும் அனுப்பவும் சார்) கிராம மக்களின் தேவைகள் பூர்த்தி செய்வேன்: பன்னீர் செல்வம் உறுதி கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்: பன்னீர்செல்வம் உறுதி குதிரை மீது இரக்கம் காட்டினார்
(இந்த செய்தியை கண்டிப்பாக சேர்க்கவும், விருதுநகருக்கும் அனுப்பவும் சார்) கிராம மக்களின் தேவைகள் பூர்த்தி செய்வேன்: பன்னீர் செல்வம் உறுதி கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்: பன்னீர்செல்வம் உறுதி குதிரை மீது இரக்கம் காட்டினார்
ADDED : ஏப் 08, 2024 05:29 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தேசிய ஜனநாயககூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்போட்டியிடுகிறார்.
அவர் நேற்று ராமநாதபுரம் அருகேவாலாந்தரவை, வழுதுார், பெருங்குளம் உள்ளிட்டகிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போதுஅப்பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டிற்கு நிரந்த தீர்வுகாணப்படும்.ஆரம்ப சுகாதாரநிலையம் அரசுமருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். மகளிருக்குசுகாதார வளாக அமைத்து தரப்படும்.
நான் வெற்றி பெற்றால் மக்களின் தேவைகளை கண்டறிந்து பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று பேசினார்.
குதிரை மேல் இரக்கம்
முன்னதாக வழுதுாரில் பிரசாரத்திற்குவந்த போது அலங்கரிக்கப்பட்ட நடன குதிரைகளுடன்மேள தாளத்துடன் பன்னீர் செல்வதற்கு வரவேற்பு அளித்தனர்.அப்போது குதிரையை மண்டியிட்டு வணக்கம் செய்ய வைக்கஅதன் பயிற்சியாளர் முயன்றார். அவரிடம் வேண்டாம்.
குதிரையை காலில் விழ வைக்க கூடாது என பன்னீர்செல்வம்அறிவுரை வழங்கினார். செம்படையார்குளம் ஊரில் நான் துபாய்காரன்.
மும்பை மற்றும்மதுரை விமான நிலையங்களுக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கவேண்டும் என ஒருவர் தொடர்ந்து கூச்சலிட்டு அலப்பறையில் ஈடுப்பட்டார்.
அவரை நீங்கள் துபாயில் இருந்து வந்துள்ளீர்களா எனக் கேட்டுவிட்டு பன்னீர்செல்வம் தெடர்ந்து ஓட்டுச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

