sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தியாகி நாகூர் கனி காலமானார்

/

தியாகி நாகூர் கனி காலமானார்

தியாகி நாகூர் கனி காலமானார்

தியாகி நாகூர் கனி காலமானார்


ADDED : மே 11, 2024 10:14 PM

Google News

ADDED : மே 11, 2024 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருநாழி:-ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர் நாகூர்கனி 99. முன்னாள் இந்திய தேசிய ராணுவ (ஐ.என்.ஏ.,) வீரரான இவர் காலமானார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆரம்பித்த இந்திய தேசிய ராணுவத்தில் நாகூர் கனி சேர்ந்து பர்மாவில் இருந்து கொண்டு இந்தியா விடுதலைக்காக போராடினார். இந்திய சுதந்திரத்திற்கு பின் பெருநாழியில் குடியேறினார்.

இவருக்கு தமிழக அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் அளித்து வந்தது. வயது முதிர்வால் நேற்று முன்தினம் இரவு காலமானார். கமுதி தாசில்தார் சேதுராமன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஸ்வரன், வருவாய்த்துறையினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நாகூர் கனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை பெருநாழி முஸ்லிம் மையவாடியில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us