ADDED : ஜூன் 21, 2024 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுார் மாசாணி அம்மன் கோயில் பூக்குண்டம் திருவிழா ஜூன் 19ல் மயான பூஜையுடன் துவங்கியது.
விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை 10:00 மணிக்கு ஆத்தியடியான் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்துச் சென்ற பக்தர்கள் மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாலையில் தீச்சட்டி எடுத்தல், இரவில் பூ குண்டம் வளர்க்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது.
விழாவின் தொடர்ச்சியாக முக்கிய விழாவான பூ குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று காலை 9:00 மணிக்கு நடக்கிறது.
இதில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும் தீ மிதித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். அதைத் தொடர்ந்து கொடிமரம் இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.