/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் ஆடிப்பெருக்கு விழா ஆக.3 பூக்குழி இறங்குதல்
/
மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் ஆடிப்பெருக்கு விழா ஆக.3 பூக்குழி இறங்குதல்
மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் ஆடிப்பெருக்கு விழா ஆக.3 பூக்குழி இறங்குதல்
மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் ஆடிப்பெருக்கு விழா ஆக.3 பூக்குழி இறங்குதல்
ADDED : ஆக 01, 2024 04:29 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன், சந்தன கருப்புசாமி கோயில் 21ம் ஆண்டு ஆடி 18ம் பெருக்கு விழா நடக்கிறது.
இக்கோயிலில் ஜூலை 25 காலை கணபதி ஹோமம், கொடியேற்றம், அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. பின்னர் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இரவு துவங்கி தினமும் அபிஷேகம் மற்றும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் அருள் பாலிக்கிறார். இன்று(ஆக.1) மாலை 6:00 மணிக்கு குத்து விளக்கு பூஜை நடக்கிறது.
ஆக.3ல் காலையில் பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி நேர்த்திக் கடன் மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்க உள்ளனர். மேலும் ஆக.4 காலை அம்மனுக்கு காப்பு களையப்பட்டு பாலபிபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்துள்ளனர்.