ADDED : மார் 03, 2025 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : -பரமக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பண்ணசுவாமி கோயில் 25வது ஆண்டு பால்குட விழா நடந்தது.
இங்கு மகா சிவராத்திரி, பாரிவேட்டை விழா பிப்.,24ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பிப்., 26 மகாசிவராத்திரி விழா, 28ல் பாரிவேட்டை விழா நடந்தது.
நேற்று காலையில் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் கட்டி முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜீவானந்தம் செய்திருந்தார்.