/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் குரங்குகள் உலா: மக்கள் அச்சம்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் குரங்குகள் உலா: மக்கள் அச்சம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் குரங்குகள் உலா: மக்கள் அச்சம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் குரங்குகள் உலா: மக்கள் அச்சம்
ADDED : ஆக 12, 2024 04:50 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குரங்குகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அவற்றை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் கலெக்டர் அலுவலக வளாகம், பட்டணம்காத்தான் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் திரிகின்றன. இவை தென்னை மரங்களில் ஏற்றி காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன.
வீடு, அலுவலகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதால் மக்கள் அச்சமடைந்தனர்.
எனவே ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் திரியும் குரங்குகளை பிடித்து பாதுகாப்பாக அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.