/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பங்குனி பொங்கல் விழாவில் முத்துமாரியம்மன் வீதி உலா
/
பங்குனி பொங்கல் விழாவில் முத்துமாரியம்மன் வீதி உலா
பங்குனி பொங்கல் விழாவில் முத்துமாரியம்மன் வீதி உலா
பங்குனி பொங்கல் விழாவில் முத்துமாரியம்மன் வீதி உலா
ADDED : மார் 23, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: -கமுதி அருகே முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடக்கிறது.
மார்ச் 15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் முத்துமாரியம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம் உட்பட 16 வகையான அபிஷேகம், தீபாரதனை நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் காமதேனு, ரிஷபம், குதிரை உட்பட பல்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது.
நேற்று யானை வாகனத்தில் முத்துமாரியம்மன் முக்கிய வீதிகளில் நகர் வீதி உலா வந்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தர், பிரசாதம் வழங்கப்பட்டது.
மார்ச் 26ல் பொங்கல் விழா, மார்ச் 27ல் அக்கினி சட்டி, பால்குடம், பூக்குழி இறங்குதல், மார்ச் 29ல் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.

