ADDED : செப் 04, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை மேல ரதவீதி தெரு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம், இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.