sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலுயிர் பெருக்கத்தில் கால நிலை மாற்றம் குறித்து தேசிய கருத்தரங்கு 

/

கடலுயிர் பெருக்கத்தில் கால நிலை மாற்றம் குறித்து தேசிய கருத்தரங்கு 

கடலுயிர் பெருக்கத்தில் கால நிலை மாற்றம் குறித்து தேசிய கருத்தரங்கு 

கடலுயிர் பெருக்கத்தில் கால நிலை மாற்றம் குறித்து தேசிய கருத்தரங்கு 


ADDED : மார் 02, 2025 05:47 AM

Google News

ADDED : மார் 02, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, பாரதிதாசன் பல்கலை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் இணைந்து கடலுயிர்கள் பெருக்கத்தில் கால நிலை மாற்றம் குறித்த தேசிய கருத்தரங்கை நடத்தினர், கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். கருத்தரங்க நோக்கம் குறித்து பாரதிதாசன் பல்கலை பருவநிலை மாறுபாடு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் கோவிந்தராஜ் பேசினார்.

முதல் அமர்வில் கல்லுாரியின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் காசிநாததுரை, உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்று பேசுகையில் காலம் எல்லாவற்றையும் தீர்மானிப்பது தான். ஆனால் இன்று பருவ கால மாறுதல்களின் தாக்கத்தால் கடலுயிர்கள் வாழ்வதிலும், தன்னுயிர் பெருக்கத்திற்கும் பிரச்னைகள் உள்ளதாக ஆதாரங்களுடன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா வாழ்த்தினர். கல்லுாரி உள்தர உறுதிப்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us