sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வாட்டும் கடும் வறட்சியால் கருகும் வேப்பமர இலைகள்

/

வாட்டும் கடும் வறட்சியால் கருகும் வேப்பமர இலைகள்

வாட்டும் கடும் வறட்சியால் கருகும் வேப்பமர இலைகள்

வாட்டும் கடும் வறட்சியால் கருகும் வேப்பமர இலைகள்


ADDED : மே 09, 2024 05:09 AM

Google News

ADDED : மே 09, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்டத்தின் நிலவும் கடும் வறட்சியால் வேப்பமரங்களின் இலைகள் கருகுகின்றன.

மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பருவமழை இன்றி கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் அனல் காற்று வீசுகிறது. இதனால் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை வெளியில் செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர்.

குறிப்பாக குழந்தைகளும், வயதானவர்களும் வெயில் தாக்கத்தால் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றனர். தப்பிக்க தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் அருந்தி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

கடும் வெப்பத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரம், செடி, கொடிகளும் கருகுகின்றன. குறிப்பாக வேர் முதல் இலை வரை பல்வேறு மருத்துவ குணமுடைய வேப்ப மரங்களும் ஆர்.எஸ்மங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் அதன் இலைகள் மரங்களில் கொத்துக்கொத்தாக கருகுகின்றன.

பொதுவாக வேப்ப மரங்கள் கருகத் துவங்கும் காலத்தில் பொது மக்களுக்கு அதிகளவில் அம்மை நோய் தாக்கும். இதனால் பொது மக்களுக்கு அம்மை நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us