sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புதிய கழிவுநீர் கால்வாய் சேதம்: மக்கள் அவதி

/

புதிய கழிவுநீர் கால்வாய் சேதம்: மக்கள் அவதி

புதிய கழிவுநீர் கால்வாய் சேதம்: மக்கள் அவதி

புதிய கழிவுநீர் கால்வாய் சேதம்: மக்கள் அவதி


ADDED : மே 02, 2024 05:03 AM

Google News

ADDED : மே 02, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து பள்ளமாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

முதுகுளத்துார் கீழரத வீதியில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி வீடுகளின் முன்பு தேங்கியது.

இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து முதுகுளத்துார் பேரூராட்சி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு இருந்து கீழ ரதவீதி வரை புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.

அப்போது கால்வாய் பணியை சரி செய்யும் போது கால்வாய் விரிசல் ஏற்பட்டது. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு புதிதாக கட்டப்பட்டு சேதமடைந்துள்ள கால்வாயை மட்டும் அகற்றிவிட்டு பள்ளமாக இருப்பதால் தெருக்களில் நடந்து செல்லும் மக்கள் அச்சப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து முழுமையாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us