sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரிச்சல்முனை கடற்கரையில் வடமாநில சிறுமி மீட்பு

/

அரிச்சல்முனை கடற்கரையில் வடமாநில சிறுமி மீட்பு

அரிச்சல்முனை கடற்கரையில் வடமாநில சிறுமி மீட்பு

அரிச்சல்முனை கடற்கரையில் வடமாநில சிறுமி மீட்பு


ADDED : ஜூலை 20, 2024 03:17 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே அரிச்சல்முனை கடற்கரையில் உறவினர்கள் விட்டுச் சென்றதால் தவித்த வட மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று முன் தினம் மாலை உறவினர்கள் விட்டுச் சென்ற நிலையில் சிறுமி தவித்துள்ளார். அங்கு இருந்த ஆட்டோ டிரைவர்கள் சிறுமியை மீட்டு ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் அவரது உறவினர்களை தேடினர். ஆனால் யாரும் இல்லாததால் ராமேஸ்வரம் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினரிடம் சிறுமியை டிரைவர்கள் ஒப்படைத்தனர்.

சிறுமியை விசாரித்ததில் அவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அங்குள்ள பள்ளியில் 6 ம் வகுப்பு படிப்பதும் தெரிய வந்தது. சிறுமியின் பெற்றோர் இறந்த நிலையில் சித்தப்பா வீட்டில் வளர்ந்துள்ளார்.

சித்தப்பா சிறுமியை அழைத்து வந்து ராமேஸ்வரம் அரிச்சல்முனை பகுதியில் விட்டு சென்றது தெரிய வந்தது. குழந்தைகள் நலக்குழுவினர் சிறுமியை ராமநாதபுரம் அன்னை சத்யா குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us