ADDED : மார் 02, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மருதகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் முகாம் துவக்க விழா நடந்தது.
தலைமையாசிரியர் வெங்கட் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பாண்டிமாதேவி முன்னிலை வகித்தார். பேராசிரியர் பாலமுருகன் வரவேற்றார்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் துப்புரவு பணி செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் நிர்மல்குமார், நாகராஜ் செய்தனர்.