ADDED : மார் 09, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அரசு கலைக்கல்லுாரி சார்பில் திருவாடானை அருகே டி.கிளியூர் கிராமத்தில் மார்ச் 10 முதல் 16 வரை 7 நாட்கள் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நடக்கிறது.
இது குறித்து முதல்வர் பழனியப்பன் கூறியதாவது:
இளைஞர் பாரதம் மற்றும் மின்னணு நுட்பறிவு எனும் கருத்தில் இந்த முகாம் நடைபெறும். கிராமத்தை சுத்தம் செய்தல், மருத்துவ முகாம், ஊருணி சுத்தம் செய்தல் மற்றும் சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு, கிராமங்களுக்கு என்ன தேவை என்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.