sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் கருகும் மரக்கன்றுகள் திட்டத்தை செயல்படுத்துங்க ஆபீஸர்

/

திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் கருகும் மரக்கன்றுகள் திட்டத்தை செயல்படுத்துங்க ஆபீஸர்

திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் கருகும் மரக்கன்றுகள் திட்டத்தை செயல்படுத்துங்க ஆபீஸர்

திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் கருகும் மரக்கன்றுகள் திட்டத்தை செயல்படுத்துங்க ஆபீஸர்


ADDED : ஆக 23, 2024 04:04 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது பராமரிப்பின்றி கருகி வருகின்றன.

ஓ.என்.ஜி.சி., நிறுவனம், மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டம் சார்பில் ஒன்றியத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் கடந்த மாதம் செயல்படுத்தப்பட்டது.

திருப்புல்லாணி யூனியன் அலுவலக வலது மற்றும் இடது பக்க நுழைவு வாயில் பகுதிகளில் பல்வேறு நிழல் தரும் 150 மரக்கன்றுகள் நடப்பட்டு அவற்றைச் சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 10ல் நடந்த துவக்க விழாவிற்கு பிறகு மரக்கன்றுகள் முறையாக பராமரிப்பு இல்லாததால் வெயிலால் கருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருப்புல்லாணி யூனியன் அலுவலக முகப்பு பகுதி பசுமையாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி கருகி வருகிறது.

எனவே 100 நாள் திட்ட பணியாளர்கள் மற்றும்துாய்மை பணியாளர்கள் மூலம் முறையாக பராமரித்து அப்பகுதியை பசுமைப் பகுதியாக மாற்றுவதற்கு யூனியன் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us