ADDED : மே 03, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கடலாடி ஆற்றுப்படுகையில் லாரியில் மணல் திருடி கமுதி பகுதியில் கொண்டு வருவதாக கோவிலாங்குளம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. கோவிலாங்குளம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற லாரியை போலீசார் மறித்த போது டிரைவர் தப்பி ஓடினார்.
மணல் கடத்தியது தெரிய வந்ததால் லாரியை பறிமுதல் செய்தனர். கோவிலாங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து எம்.கரிசல்குளம் ஞானவேலை 39, கைது செய்தனர்.