sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.ஒரு கோடி கஞ்சா கடலில் சிக்கியது

/

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.ஒரு கோடி கஞ்சா கடலில் சிக்கியது

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.ஒரு கோடி கஞ்சா கடலில் சிக்கியது

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.ஒரு கோடி கஞ்சா கடலில் சிக்கியது


ADDED : செப் 08, 2024 02:43 AM

Google News

ADDED : செப் 08, 2024 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் நாட்டுப்படகில் கடத்திய ரூ.ஒரு கோடி மதிப்பிலான 188 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படை ரோந்து படகை கண்டதும் கடத்தல்காரர்கள் கடலில் வீசி தப்பினர். அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படைக்கு தெரிவித்தனர்.

கடத்தலில் ஈடுபட்டோரை தமிழகத்தில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களுக்கு அருகில் இலங்கை உள்ளதால் கடல் வழியாக அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்கிறது. இலங்கை மன்னாரை சேர்ந்த சிலர் பைபர் படகில் இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லை அருகே தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா மூடைகளை வாங்கச் செல்வதாக இலங்கை கடற்படையின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி மன்னார் அருகே பேசாளை கடற்கரையில் வைத்து கஞ்சாவை வாங்க சென்ற இருவரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களிடமிருந்த அலைபேசியை பறிமுதல் செய்தனர். அலைபேசியில் கஞ்சா கைமாறும் இடம் குறித்த ஜி.பி.எஸ்., நம்பரை கைப்பற்றி நேற்று முன்தினம் இரவு முழுவதும் இந்திய- இலங்கை சர்வதேச கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இருந்து இலங்கை நோக்கி சென்ற நாட்டுப்படகு இலங்கை கடற்பரப்பில் நுழைந்து கஞ்சா வாங்க வருபவர்களுக்காக காத்திருந்தது தெரிந்தது.

அங்கு சென்ற இலங்கை கடற்படை ரோந்து படகை பார்த்ததும் தமிழக படகில் இருந்தவர்கள் கஞ்சா மூடைகளை கடலில் வீசி தப்பினர். அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட போது படகில் தப்பி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தனர். இலங்கை கடற்படையினர் கடலில் மிதந்த ஐந்து மூடை கஞ்சாவை கைப்பற்றினர். பின் அவற்றை இலங்கை சுங்கத்துறை அகதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கஞ்சா மூடைகள் இங்கிருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் 2024ல் இதுவரை இலங்கை கடற்படை, கடேலோர காவல் படையினர் இணைந்து 1242 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா மூடைகளில் மணல்மேல்குடி என எழுதப்பட்டிருந்ததால் ராமநாதபுரம், புதுக்கோட்டை கியூ பிரிவு போலீசார் கடற்கரைப்பகுதியில் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us