நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:தேவிபட்டினம் அருகே நாரல் கிராமத்தை சேர்ந்தவர் துரைபாண்டி 50. திருவாடானை அருகே கீழ்பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் 55.
இருவரும் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தனித்தனியே டூவீலர்களில் சென்றனர். பெருவண்டல் விலக்கு ரோடு அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் துரைபாண்டி இறந்தார். செல்வம் சிகிச்சையில் உள்ளார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.