sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பன் புதிய பாலம் அக்போபரில் திறப்பு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

/

பாம்பன் புதிய பாலம் அக்போபரில் திறப்பு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

பாம்பன் புதிய பாலம் அக்போபரில் திறப்பு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

பாம்பன் புதிய பாலம் அக்போபரில் திறப்பு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்


ADDED : செப் 13, 2024 10:17 PM

Google News

ADDED : செப் 13, 2024 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:''பாம்பன் புதிய ரயில் பாலம் அக்டோபரில் திறக்கப்பட்டு ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கும்,'' என, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

மதுரையில் இருந்து சிறப்பு ரயில் ஆய்வு பெட்டியுடன் புறப்பட்ட மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா நேற்று மதியம் பாம்பன் ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் செய்து துாக்கு பாலம் செயல்படும் விதம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின், அங்கிருந்து ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கு, 90 கோடியில் கட்டப்படும் புதிய ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணியை பார்வையிட்டார். முன்னதாக சரத் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:

பாம்பன் புதிய பாலம் கட்டுமான பணி முடியும் தருவாயில், தற்போது துாக்கு பாலத்தை பொருத்தும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும் அக்., இறுதிக்குள் பாம்பன் பாலம் திறக்கப்பட்டு, ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கும்.

ராமேஸ்வரத்தில் பயணியர் வசதிக்காக கழிப்பறை, ஓய்வறை, சுகாதார வசதி மற்றும் பிளாட்பாரம் கட்டுமானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிய பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது குறித்து உயர்மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, ஆர்.வி.என்.எல்., தலைமை திட்ட மேலாளர் பத்மநாபன், தெற்கு ரயில்வே ஆலோசனை கமிட்டி உறுப்பினர் ராமநாதன், ரயில்வே பொறியாளர்கள் பலர் இருந்தனர்.






      Dinamalar
      Follow us