/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த உத்தரவு
/
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த உத்தரவு
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த உத்தரவு
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த உத்தரவு
ADDED : மார் 02, 2025 05:44 AM
திருவாடானை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முன்னதாகவே துவக்கி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவாடானை வட்டார அரசு தொடக்கபள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வியை நிறைவு செய்யும் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்த வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோருக்கு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகள் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை துவங்கியுள்ளோம் என்றனர்.