ADDED : செப் 09, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் சர்ச்சில் உள்ள ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழா ஆக.29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு தேர்பவனி நடந்தது.
மிக்கேல்அதிதுாதர், செபஸ்தியார், சவேரியார், புனித அருளானந்தர், ஆரோக்கியஅன்னை ஆகிய தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.
விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டது.