/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி -- பார்த்திபனுார் நான்கு வழிச்சாலையோரத்தில் தீ வைப்பு; வீணாகிய நிழல் தரும் மரங்கள்
/
பரமக்குடி -- பார்த்திபனுார் நான்கு வழிச்சாலையோரத்தில் தீ வைப்பு; வீணாகிய நிழல் தரும் மரங்கள்
பரமக்குடி -- பார்த்திபனுார் நான்கு வழிச்சாலையோரத்தில் தீ வைப்பு; வீணாகிய நிழல் தரும் மரங்கள்
பரமக்குடி -- பார்த்திபனுார் நான்கு வழிச்சாலையோரத்தில் தீ வைப்பு; வீணாகிய நிழல் தரும் மரங்கள்
ADDED : ஆக 05, 2024 07:05 AM

பரமக்குடி : மதுரை- பரமக்குடி நான்கு வழிச் சாலை ஓரங்களில் பார்த்திபனுார் இடையே தீ வைத்ததால் மரங்கள் எரிந்து வீணாகியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் புனித தலம் உள்ளது. கடல் சூழ்ந்த இந்த தீவு பூமிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
பாம்பன் கடலில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. தொடர்ந்து மதுரையில் இருந்து நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது.
இதற்காக பல நுாறு மரங்கள் வெட்டப்பட்ட சூழலில் நான்கு வழிச்சாலையோரம் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் குறிப்பிட்ட இடங்களில் மரக்கன்றுகள் கால்நடைகளுக்கு இரையாவதுடன் தண்ணீரின்றி கருகி உள்ளன.
இத்தகைய சூழலில் பரமக்குடியில் இருந்து பார்த்திபனுார் செல்லும் ரோட்டோரங்களில் ஆங்காங்கே குப்பை மற்றும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் வயல் வெளிகளில் தீ வைத்துள்ளனர். இதனால் ஒன்றியம் மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் நடப்பட்ட நிழல் தரும் மரங்கள் கருகின.
நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளை கடந்த நிலையில் குறிப்பிட இடத்தில் மட்டுமே மரங்கள் வளர்ந்துள்ளன.
ஆகவே தொடர்ந்து நிழல் தரும் மரங்களை காக்கும் நோக்கில் தீ வைக்கும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க உத்தரவிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.