sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மது குடித்தபோது தகராறு பரோட்டா மாஸ்டர் கொலை

/

மது குடித்தபோது தகராறு பரோட்டா மாஸ்டர் கொலை

மது குடித்தபோது தகராறு பரோட்டா மாஸ்டர் கொலை

மது குடித்தபோது தகராறு பரோட்டா மாஸ்டர் கொலை


ADDED : மே 26, 2024 12:58 AM

Google News

ADDED : மே 26, 2024 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்,:-ராமநாதபுரத்தில் உறவினருடன் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் பரோட்டா மாஸ்டர் மூங்கில் கம்பால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் சாயக்கார ஊருணி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் 34. இவரது அக்கா ரேவதியின் கணவர் சரவணனின் தம்பி செட்டியகோட்டையை சேர்ந்தவர் கணேசன், 40. இவர் ராமநாதபுரத்தில் உள்ள பிரின்டிங் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இவர் சாயக்கார ஊருணி எதிரே அப்பார்ட்மென்ட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவருடன் ரேவதியின் தம்பி ரவிக்குமார் கடந்த 4 மாதங்களாக சேர்ந்து வசித்து வருகிறார். இவர் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக இருந்தார்.

கணேசனும், ரவிக்குமாரும் நேற்று முன்தினம் இரவு மது குடித்துள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் சண்டையிட்டனர். ரவிக்குமார் செங்கல்லால் கணேசனை தாக்கினார்.

ஆத்திரமடைந்த கணேசன் அருகில் கிடந்த மூங்கில் கம்பால் தலை உள்ளிட்ட இடங்களில் தாக்கியதில் ரவிக்குமார் அதே இடத்தில் பலியானார். கணேசனை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர். ரவிக்குமாருக்கு பரணி என்ற மனைவியும், ஆகாஷ் என்ற 6 வயது மகனும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us