/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடியிருப்பு பகுதியில் திரியும்குரங்குகளால் மக்கள் அச்சம்
/
குடியிருப்பு பகுதியில் திரியும்குரங்குகளால் மக்கள் அச்சம்
குடியிருப்பு பகுதியில் திரியும்குரங்குகளால் மக்கள் அச்சம்
குடியிருப்பு பகுதியில் திரியும்குரங்குகளால் மக்கள் அச்சம்
ADDED : ஏப் 25, 2024 05:20 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் நகரில் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் சுற்றித்திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அவற்றை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் வனப்பகுதிகளில்போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் கலெக்டர் அலுவலக வளாகம், பட்டணம்காத்தான் பகுதியில் குரங்குகள் திரிகின்றன. இவை தென்னை மரங்களில் ஏறி காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன.
நேற்று தினமலர் நகர், மதுரை ரோடு பகுதிகளில் இரண்டு குரங்குகள் வீடுகளில் காம்பவுண்ட் சுவர், தென்னை மரங்களில் தாவி குதித்தன. இவை வீட்டிற்குள் வந்துவிடுமோ என பெண்கள், சிறுவர்கள் அச்சமடைந்தனர்.
எனவே ராமநாதபுரம் குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

