sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பள்ளியில் சுகாதார வளாகங்களை மேம்படுத்த மக்கள் வலியுறுத்தல்

/

பள்ளியில் சுகாதார வளாகங்களை மேம்படுத்த மக்கள் வலியுறுத்தல்

பள்ளியில் சுகாதார வளாகங்களை மேம்படுத்த மக்கள் வலியுறுத்தல்

பள்ளியில் சுகாதார வளாகங்களை மேம்படுத்த மக்கள் வலியுறுத்தல்


ADDED : ஜூன் 04, 2024 06:07 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் சுகாதார வளாகங்களை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

பரமக்குடியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், சி.பி.எஸ்.சி., பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 10ல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பள்ளிகளில் துாய்மை மற்றும் கட்டமைப்பு வசதிகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பலவற்றிலும் சுகாதாரவளாகங்கள் முறைப் படுத்தாமல் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுகாதார வளாகங்களை கட்டமைக்க வேண்டும்.

ஆனால் பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தும் நிர்வாகிகள் அவர்களுக்கான குடிநீர் மற்றும் சுகாதார வளாகங்கள் என மேம்படுத்தாமல் உள்ளனர். எனவே மாணவர்களின் நலனை கருதி சுகாதார வளாக கட்டமைப்பை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.






      Dinamalar
      Follow us