/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராம ராஜ்ஜியம் நடத்துகிறார் பிரதமர் மோடி: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
/
ராம ராஜ்ஜியம் நடத்துகிறார் பிரதமர் மோடி: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
ராம ராஜ்ஜியம் நடத்துகிறார் பிரதமர் மோடி: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
ராம ராஜ்ஜியம் நடத்துகிறார் பிரதமர் மோடி: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
ADDED : ஆக 12, 2024 11:36 PM

ராமேஸ்வரம் : ''அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து ராம ராஜ்ஜியம் ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி,'' என, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடந்த கம்பன் கழகம் 35ம் ஆண்டு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
கம்பன் கழக தலைவர் முரளிதரன் வரவேற்றார். 'கம்பனில் இலக்கியத் தாக்கம்,' என்ற நுாலை கவர்னர் வெளியிட இலங்கை கம்பன் கழக தலைவர் ஜெயராஜ் பெற்றார்.
பின் கவர்னர் ரவி பேசியதாவது: கம்பரை ஒரு சித்தர், மகரிஷி, புரட்சியாளர் என கூறலாம். பல வகை மக்கள் வாழும் இந்தியாவில் ராமாயணம் மூலம் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அதன்படி வாழ்ந்தார்கள். ஸ்ரீ ராமர் ஆட்சி காலத்தில் அவர் நல் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்ததால் தான் இந்தியா சிறந்த நாடாக உள்ளது. இதனை மையமாக வைத்து தான் நம் அரசியல் சாசனமும் உருவானது.
ராமாயணம் வரலாற்றை பாமர மக்களும் எளிதில் தெரிந்திடும் வகையில் கம்பர் வடிவமைத்தார். தற்போது பிரதமர் மோடி ராமராஜ்ஜியம் ஆட்சியை நடத்துகிறார்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி பணிபுரிகிறார்.
சில வெளிநாட்டு தீய சக்திகள் நம்மை ஆரியர், திராவிடர்கள் என பிரித்தாள நினைக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு நம் நாடு. இதில் யாரும் உரிமை கோர முடியாது. இதனையே பிரதமர் மோடியும் பின்பற்றி அனைத்து துறைகளையும் கட்டமைத்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இன்று உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. வருங்காலத்தில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடையும். புனித நகரான ராமேஸ்வரத்தில் ராமர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வாழ்ந்த பகுதியில் பிரதமர் மோடியும் தரிசனம் செய்துள்ளார் என்றார்.
கம்பன் கழகம் புதுச்சேரி செயலாளர் சிவக்கொழுந்து, மதுரை தலைவர் சங்கரசீதாராமன், ராமேஸ்வரம் செயலாளர் நந்தகோபால், பொருளாளர் ராமச்சந்திரன், டாக்டர் குலசேகரன், சுவாமி நியமானந்தா, புரவலர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பாம்பன் குந்துகால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்ற கவர்னர் சிலைக்கு மலர் துாவி வணங்கினார்.