ADDED : ஆக 22, 2024 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக.27ல் பால்குட ஊர்வலம்
பரமக்குடி: பரமக்குடி அருகே லெட்சுமணன் குடியிருப்பு பூமாரியம்மன் கோயில் 15ம் ஆண்டு அக்னி சட்டி, பால்குடம் மற்றும் பொங்கல் விழா துவங்கியது.
கோயிலில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டிய நிலையில் பக்தர்களும் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. முக்கிய விழாவாக ஆக.26 மாலை 5:00 மணி முதல் அக்னி சட்டி, பூத்தட்டு விழா எடுக்கப்பட்டு அம்மன் பூக்களால் அலங்காரம் செய்யப்படுவார்.
ஆக.27 காலை 5:00 மணி துவங்கி பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்தும், வேல் குத்தியும் வலம் வருவர்.
காலை 10:00 மணிக்கு பூமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
அன்று காலை அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.