sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலாடியில் லஞ்ச வழக்கில் கைதான மின்வாரிய அலுவலர்கள் 'சஸ்பெண்ட்'

/

கடலாடியில் லஞ்ச வழக்கில் கைதான மின்வாரிய அலுவலர்கள் 'சஸ்பெண்ட்'

கடலாடியில் லஞ்ச வழக்கில் கைதான மின்வாரிய அலுவலர்கள் 'சஸ்பெண்ட்'

கடலாடியில் லஞ்ச வழக்கில் கைதான மின்வாரிய அலுவலர்கள் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 15, 2024 01:47 AM

Google News

ADDED : ஆக 15, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியில் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.4000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான மின் வாரிய உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கடலாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பெயின்டர் ராஜநாதன் 32. இவர் கடலாடி மின் வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

அதனை வழங்க உதவி பொறியாளர் கணேஷ்குமார் 36, வணிக ஆய்வாளர் முத்துவேல் 37, ஆகிய இருவரும் ரூ.4000 லஞ்சம் கேட்டனர்.

இதுகுறித்து ராஜநாதன் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

கடலாடி மின்வாரிய அலுவலகத்தில் வைத்து ரசாயனம் தடவிய ரூ.4000த்தை அலுவலர்கள் கூறியபடி ஆக. 8 ல் கேங்மேன் செந்துார் பாண்டியிடம் ராஜநாதன் கொடுத்தார்.

மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து விசாரித்தனர்.

உயர் அலுவலர்கள் வாங்க சொன்னதால் வாங்கியதாகவும், தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அவர் வாக்குமூலம் அளித்தார். இதன்படி உதவி பொறியாளர் கணேஷ்குமார், வணிக ஆய்வாளர் முத்துவேலை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து இருவரையும் சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் சகர்பான் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us