ADDED : ஏப் 30, 2024 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி, - -விருதுநகர் மாவட்டம் பரளச்சியை சேர்ந்தவர் ரவீந்திரன் 52.
முதுகுளத்துார் டி.இ.எல்.சி., ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். முதுகுளத்துாரில் இருந்து டூவீலரில் (ஹெல்மட் அணிந்திருந்தார்) கமுதிக்கு சென்றார். பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயமடைந்தார். கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.