ADDED : செப் 06, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 பெட்டிக்கடைகளில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து எச்சரிக்கை செய்தனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் ஹபீப்ராஜா கூறியதாவது:
பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அளிக்கும் புகாரின் பேரில் தொண்டியில் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
முதல் கட்டமாக கடைகாரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் நாட்களில் அபராதம் விதிக்கப்படும் என்றார்.